
மும்பையில் கடந்த 2002-ம் ஆண்டு சல்மான் கானின் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. சல்மான்கானின் மெய்க்காப்பாளர் அளித்த புகாரின் பேரில், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில், மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
No comments :