
லிங்கா’ படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற செய்திதான் தற்போதய தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்படும் செய்தி
. ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாகவும், இந்த படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கப்போவதாகவும், இப்படத்திற்கு தலைப்புகூட தேர்வு செய்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன.
இதற்கிடையில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘காஞ்சனா-2’ ஆம் பாகத்தின் பட வெற்றியை பார்த்து வியந்துபோன ரஜினி, அவரை நேரில் அழைத்து வாழ்த்துக்கூறியதோடு மட்டுமல்லாமல், ராகவா லாரன்சின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
No comments :