
அஜித் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமத்து கதையில் நடித்து வெற்றி பெற்ற படம் வீரம். இப்படத்தை டைரக்டர் சிவா இயக்கியிருந்தார். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து உள்ளது. ’ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படத்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம் தொடர்ந்து இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
சிவா-அஜித் கூட்டணி அமைக்கும் இந்த புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே இசையமைப்பாளர் அனிருத் தனது வேலையை தொடங்கி விட்டார்.
அண்மையில், அனிருத் படத்தின் தீம் மியூசிக் மற்றும் அஜிதின் அறிமுகப் பாடல் நிறைவு செய்து விட்டதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
சுருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில், மாடலாக இருந்து நடிகராக மாறிய பாலிவுட் நடிகர் கபீர் துகான் சிங் வில்லனாக நடிக்கின்றார்.
மேலும், சந்தானம், தம்பி ராமையா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய ஸ்டண்ட் சிவா, இந்த படத்திலும் அஜித்துடன் கை கோர்த்துள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் வேகமாக நடைபெறுகிறது.
No comments :