’ஒரே இரவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு.




கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. அடுத்ததாக ‘விஸ்வரூபம்–2,  பாபநாசம் ஆகிய படங்கலும் கமலின் வரிசையில் உள்ளன.
இந்த இரண்டு படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரவிருக்கின்றன.

தற்போது கமலின் அடுத்த படம் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன, இவர் நடிக்கும் படத்திற்கு ’ஒரே இரவு’ என்று பெயரிடப்பட்டு உள்ளதாகவும் , வசூல் ராஜாவுக்கு பிறகு இந்த படத்தில் கமலுடன் பிரகாஷ்ராஜ் இணைகிறார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

இந்த புதிய படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆக் ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ள இப்புதிய படத்தை, கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கவுள்ளார். கமலே இப்படத்தை தயாரிக்கவுள்ளார் என்றும் தகவலும் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கும் ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் துவங்கவுள்ளதாம்.

தெலுங்கு-தமிழில் என்று இரு மொழிகளிலும் தயாராகும் இந்த படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம் ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை கொண்டு ஸ்டைலான திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. 

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top