அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை மீது விசுவாசம் கொண்டு, தமக்கு ஏற்பட்ட இன்னல்களை தாங்கிக்கொள்ள முடியாமல், தொண்டர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் செய்திகளை கேட்டு துயரமடைந்தாக தெரிவித்துள்ளார். தொண்டர்கள் நிதானம் காக்க வேண்டும் என்ற தாம் வலியுறுத்தியும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வேதனையளிப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
இனி, அதிமுகவினர் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.மேலும், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துக்கொண்ட சேலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பத்திற்கும், உடல் நலமின்றி இறந்த திருப்பூரை சேர்ந்த பாவாயம்மாள் குடும்பத்திற்கும் நிவாரண உதவியாக 3 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
No comments :