
ஆப்பிள் நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, கைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது, நவீன கைக்கடிகாரங்களின் விற்பனையையும் துவக்கியுள்ளது. ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள ஆப்பிள் விற்பனை கடையில், திரண்ட ஏராளமானோர், புதிய கைக்கடிகாரத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
லண்டன், டோக்கியோ, மிலன், பெர்லின், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் கைக்கடிகாரத்தை வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். இக்கடிகாரங்கள் வாயிலாக குறுந்தகவல் அனுப்பலாம், போன் செய்து பேசலாம், பல வகையிலான ப்ரோகிராம்களை செய்து கொள்ளலாம். இவ்வகை வசதிகளே இளைஞர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.
No comments :