
கடந்த ஆண்டில் அதிக தள்ளுபடியில் பொருட்களை விற்று பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சரியாக அமையவில்லை என்றே கூறலாம். கடந்த இரண்டு நிதியாண்டுகளில் விற்பனை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஃபிலிப்கார்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு கேரள மாநில அரசு 54 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மின்னணு பொருட்களை விற்பனை செய்வதற்கு அமேசான் நிறுவனத்துக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. அதிக தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்வதால், கடைகளில் பொருள் விற்பனை பாதிக்கப்படுவதாக ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மீது வணிகர்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இதற்கிடையே, அடுத்த 6 மாதத்தில் ஆன்லைன் ஷாப்பிங் பிரிவில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது
No comments :