
உலக கோப்பை கிரிக்கெட்டில் 2-வது அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 329 ரன் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது 3-வது வீரராக விராட் கோலி களம் இறங்கினார்.அப்போது மைதானத்தில் இருந்த அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா கைத்தட்டி உற்சாகப் படுத்தினார்.கோலி அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்து விடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அதில் மண்ணை போட்டு கோலி மூடிவிட்டார். தேவையில்லாத ஷாட்டை ஆடி 13 பந்துகளில் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோலி விளையாட வந்தபோது அனுஷ்கா உற்சாகமாக அவரது பேட்டிங்கைப் பார்க்கத் தயாரானார். மேலும் கேமரா அவர் பக்கம் திரும்பியபோது புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார்.
அனுஷ்காவுடன் வ்ந்திருந்த நண்பர்கள் குழுவும் போட்டியையும், கோலி ஆட்டத்தையும் கண்டு ரசிக்க வந்திருந்தது. அவர்களுடன் உற்சாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் அனுஷ்கா.
கோலி அவுட்டானபோது அனுஷ்காவின் முகம் போன போக்கு. நம்ப முடியாத ஷாக் அந்த முகத்தில் தெரிந்தது.
அனுஷ்கா சர்மா கன்னத்தில் கை வைத்தப்படி உறைந்து போனார். அவரது முகத்தை டி.வி.யில் காட்டி கொண்டே இருந்தனர். ஏற்கனவே கோலி மீது ஆத்திரத்தில் இருந்த ரசிகர்களின் வெறுப்பு அனுஷ்கா சர்மா மீதும் திரும்பியது.போட்டி முடிந்ததும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக கோலி - அனுஷ்காவை காய்த்து எடுத்து விட்டனர். சில இடங்களில் விராட் கோலியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர், அதை தீ வைத்து எரித்தனர். அவரது காதலி அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்களையும் எரித்தனர். அவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது, காதலியுடன் ஊர் சுற்றுவதே கோலியின் மோசமான ஆட்டத்துக்கு காரணம் என்று தெரிவித்தனர்.
இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, பாலிவுட் நடிகர் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, அபிஷேக் பாச்சான்,அர்ஜூன் கபூர் ஆகியோர் அனுஷ்கா சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்
இது குறித்து வீராட் கோலி -அனுஷ்கா ஜோடி கவலை எதுவும் படவில்லை.இந்த ஜோடி கைகோர்த்தபடி ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். கோலி அனுஷ்காவை பாதுகாத்து அழைத்து சென்றார். கோலி அனுஷ்கா கார் இருக்கையில் அமர உதவி செய்தார்.அந்த காரிலேயே அந்த ஜோடி புறப்பட்டு சென்றது.
No comments :