இருளில் மூழ்கிய உலகம்: விளக்குகளை அணைத்து கொண்டாடப்பட்ட எர்த் அவர்.

இருளில் மூழ்கிய உலகம்: விளக்குகளை அணைத்து கொண்டாடப்பட்ட எர்த் அவர்இயற்கை பாதுகாப்பு, கரியமில வாயு வெளியேற்ற குறைப்பு, மின்சார எரிசக்தி சேமிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பிட்ட 60 நிமிடங்கள் மட்டும் ஒட்டுமொத்தமாக மின் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பது,
இதன் மூலமாக அந்த 60 நிமிடங்கள் மின்சாரத்தை சேமிப்பது மட்டுமின்றி, மின்சாரத்தை வீணாக்கக் கூடாது என்ற விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே உண்டாக்குவது என்ற நோக்கத்திற்காக உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைப்பது தான் ’எர்த் அவர்’.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை எர்த் அவர் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, ஹாங்காங்கின் ஸ்கைலைன், சிட்னியின் ஒபேரா ஹவுஸ், மற்றும் ஆசியாவின் முக்கிய சுற்றுலாத்தலங்கள் என்று, உலகின் புகழ்பெற்ற இடங்களில் எல்லாம் இந்த ’எர்த் அவர்’-ஐ பல சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

வருடம் முழுக்க வெளிச்சத்திலேயே பார்த்து விட்டு எர்த் அவரில் சிட்னி ஹார்பர் பாலத்தை பார்க்கும் போது, பாலமே கிட்டத்தட்ட மறைந்துவிட்டதை போல் இருக்கிறது என்று ஒரு சுற்றுலா பயணி கண்கள் மின்ன தெரிவித்தார்.

இதே போல, உலகப்புகழ் பெற்ற பாரிசின் ஈபிள் டவர், தைவானின் தைபே 101 டவர், ஹாங்காங்கின் 118 மாடி கொண்ட சர்வதேச வர்த்தக மையம், என்று இரவு நேரம் பல வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் இருக்கும் இடங்கள், எர்த அவரால் இருளில் மூழ்கியது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது.

சிங்கப்பூரில் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வின் மறைவையடுத்து எர்த் அவர் நிகழ்வுகள் நடைபெறவில்லை. இந்தியாவில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ’எர்த் அவர்’ கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top