சிங்கப்பூரில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தமிழக வாலிபருக்கு சிறை

சிங்கப்பூரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர், சீதாராமன் ரமேஷ் (வயது 32). தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25–ந் தேதி அங்கு ஒரு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த 39 வயது பெண் பயணி ஒருவரை, அவரது இருக்கைக்கு பின்னால் அமர்ந்து கொண்டு, தொடர்ந்து பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், அவர்மீது போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை சிங்கப்பூர் மாவட்ட நீதிபதி ஜஸ்வந்தர் கவுர் விசாரித்தார். விசாரணையின்போது சீதாராமன் ரமேஷ் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
வழக்கு விசாரணையின்போது அவரது வக்கீல், முகமது பைரோஸ், ‘‘எனது கட்சிக்காரர் வேலையை இழக்கும் அபாயம் உள்ளது. அவர் தனது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு விடுவார். அவர் சிங்கப்பூருக்கு வந்த நோக்கம் அடிபட்டுப்போகும். அவர் ஏராளமான கடனில் உள்ளார். எனவே அவர் மீது கருணை காட்டி குறைவான தண்டனை வழங்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவருக்கு 3 வார சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிப்பதோடு கசையடி கொடுக்கவும் உத்தரவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top