ரவுடி தலையை துண்டித்து ஊர்வலம்

இந்த கொலையில் ரவுடி பத்தர் செல்வன், அவர்களது கூட்டாளிகள் பிரகாஷ், ரவி ஆகியோர் சம்பந்தப்பட்டு இருந்தனர். அவர்களை பழிவாங்க ஆர்.கே.சிவாவின் தம்பி அறிவழகன் (வயது 30) திட்டமிட்டார்.

இன்று அதிகாலை அறிவழகன் கூட்டாளிகளுடன் ரவி, பிரகாஷ் ஆகியோரை தேடி சென்றார். அவர்களை கண்டதும் ரவி ஓடி விட்டார். பிரகாஷ் மட்டும் அவர்களிடம் சிக்கினார். அவரை அறிவழகன் வெட்டினார். இதில் பிரகாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார்.
விழுப்புரத்தில் பழிக்கு பழியாக ரவுடி தலையை துண்டித்து ஊர்வலம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்அவர் இறந்து விட்டதாக நினைத்து அறிவழகன் அங்கிருந்து நகராட்சி பூங்காவிற்கு வந்தார். அங்கு பத்தர்செல்வன் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த அறிவழகன் பாய்ந்து வந்து பத்தர்செல்வனை சரமாரியாக வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே அவர் பிணமானார்.
பின்னர் பத்தர்செல்வத்தின் தலையை துண்டித்து எடுத்தார். தலையை இடது கையிலும், வீச்சு அறிவாளை வலது கையிலும் வைத்துக்கொண்டு விழுப்புரம்–புதுவை ரோட்டில் நடந்து வந்தார். அந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அறிவழகன் கையில் தலையை வைத்துக்கொண்டு வருவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினார்கள். டீ குடித்துக்கொண்டு இருந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்தார்.
பின்னர் அறிவழகன் 300 மீட்டர் தூரம் நடந்து சென்று மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலை பீடத்தின் கீழே தலையை வைத்தார். சிறிது நேரத்தில் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தார்கள்.
அறிவழகன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனது அண்ணனை கொன்ற அனைவரையும் பழி வாங்குவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தேன். அண்ணனை கொன்றதில் மூளையாக செயல்பட்டவர் பத்தர்செல்வன். அவர் என்னையும் கொல்வதற்கு சந்தர்ப்பம் பார்த்து இருந்தார். இதனால் சில நாட்களாக ஊரில் இல்லாமல் புதுவையில் பதுங்கி இருந்தேன். இனியும் பத்தர்செல்வனை விட்டு வைக்கக்கூடாது என்று கருதிய நான் இன்று கொலை திட்டத்தை அரங்கேற்றினேன். பத்தர்செல்வன் விழுப்புரத்தில் விஷப்பூச்சி போல் செயல்பட்டு வந்தார். இதனால் அவரை அழித்து இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிவழகனுடன் மேலும் பலரும் கொலையில் சம்பந்தப்பட்டு உள்ளனர். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அறிவழகனால் வெட்டப்பட்ட பிரகாஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலையால் விழுப்புரத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. விராட்டிக்குப்பம் பாதை, கீழ்பெரும்பாக்கம் மற்றும் தலை துண்டித்து வைக்கப்பட்ட காந்தி சிலை பகுதி ஆகியவற்றில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரகாஷ் சிகிச்சை பெறும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பத்தர்செல்வத்தின் தந்தை பெயர் நல்லமுத்து. இவர் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு.
பத்தர்செல்வனுக்கு மனைவியும், 2 பெண் குழந்தையும் உள்ளனர். கணவர் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பூங்காவிற்கு ஓடிவந்த மனைவி பத்தர்செல்வன் பிணத்தை பார்த்து கதறி அழுதார்.

Like This Post? Please share!

  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

No comments :

Leave a Reply

Scroll to top