
இந்தாண்டு வணிகர் தினத்தையொட்டி, தஞ்சையில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் த. வெள்ளையன் தலைமையில் உள்நாட்டு தொழில் வணிக பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.
இன்று வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதுபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விக்கிரமராஜா தலைமையில் சென்னையை அடுத்த வண்டலூரில் வணிக விரோத சட்டங்கள் எதிர்ப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த இரு மாநாடுகளிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பங்கேற்க உள்ளனர். இதனிடையே, மாநிலம் முழுவதும் வணிகர்கள் இன்று கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.
No comments :